சிவாய நம
திருப்பெருந்துறை
"சேற்றிதழ்
கமலங்கள்
மலருந்தண்
வயல்
சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே " இந்த
திருவாசகத்
தேன்
கடலில்
பயணிப்பவர்களுக்கு வழியெல்லாம்
திருப்பெருந்துறையே வருவதும்
போவதுமாய்த் தெரியும்
. வாதவூரரை
மாணிக்கவாசகராக்கிய ஆதித்திருத்தலமிது.
இத்தலம்
எங்கே
யிருக்கிறது
தெரியுமா
? இத்தலம்
மணிவாசகப்பெருமானின் சிந்தையில்
இருக்கிறது.
ஆம் "சீரார் பெருந்துறையான்
என்னுடைய
சிந்தையையே ஊராகக்கொண்டான் உவந்து"
என்கிறார்
மணிவாசகர்.
அன்பர்களே !! தமிழகத்தில் உள்ள
அறந்தாங்கியிலிருந்து ஒரு
இருபது
கி.மீ. தூரத்திலுள்ளது
இத்தலம்.
இதன்
இக்காலப்பெயர் ஆவுடையார்
கோவில்
என்பதாகும்.
கோவில்
பதிவுகளில்
இதன்
பெயர்
ஆளுடையார்
கோவில்
என்றுள்ளது.
எனவேதான்
மணிவாசகப்பெருமான் ஆளுடைஅடிகள்
என்று போற்றப்படுகிறார்.
இத்தலத்தில்
அறுபத்தாறு
கோடி
தீர்த்தங்கள்
உருவாக்கி
வைத்தமையால்
இது
திருப்பெருந்துறையாயிற்று.
சீர்காழிக்கு பல
பெயர்கள்
உண்டு
என்பதை
கேள்விப்
பட்டிருப்பீர்கள்,
ஆனால்
திருப்பெருந்துறைக்கும் பல பெயர்கள்
உண்டு
என்பதை
அறிவீர்களா
? இத்திருதலத்திற்கு ஆதிகைலாயம்,
மகா
கைலாயம்,
துவாதசாந்தம்,
சதுர்வேதபுரம்,
சிவயோகவனம்,
ஞானபுரம்
, சிவபுரம் என
இன்னும்
எத்தனையோத்
திருப்பெயர்கள் உண்டு
.
இத்திருத்தலத்தில் இறைவன்
குருந்தமரமாக
நின்று
அருள்
பாலிக்கிறார்.
இறைவன்,
பார்வதி தேவியிடம்
தாம்
நிர்குணனாகவும் சர்குணனாகவும் நிற்கும்
நிலையை
விளக்குகிறார்.
அப்போது
தாம்
நிற்குண
ஜோதியாய்
எங்கும்
மற்றும்
தம்முள்ளும்
நிற்கும்
அந்த
ஆத்மநாதனையே
த்யானித்துவருகிறேன்.
நாமிருக்குமிடம் கைலாயம்
ஆத்மநாதர்
இருக்குமிடம்
மகா
கைலாயம்
என்கிறார்
.
இதனையே
மணிவாசகப்பெருமான் "பரமானந்ததப்
பழங்கடல்
அதுவே
கருமாமுகில்
தோன்றி திருவார்ப் பெருந்துறை
வரையில்
ஏறி"
என்கிறார்.
மலையே
இல்லாதத்
திருப்பெருந்துறையில் ஆத்மநாதர் கைலையிலும்
சிறந்ததோர்
ஆத்ம
மலையிலிருக்கிறார் என்று
பொருள்படக்
கூறுகிரார்.
வள்லல் பெருமானும்
இத்திருதலத்தைக் கைலாயம்
என்றே
பகர்கிறார்.
"அத்தலமதனில்
வாழ்வார்
அனைவரும்
சிவமே"
என்கிறது
திருப்பெருந்துறைப் புராணம்.
வாதவூராருக்குக் குருவாய்
வந்து
பாதம்
காட்டி
நின்ற
ஏதமில்
திருத்தலம்
இதுவே.
நீதியே
செல்வப்பெருந்துறையில்
நிறைமலர்க்
குருந்தமே
வியசீர்
ஆதியே
அடியேன் ஆதரித்தழைத்தால்
அதெந்துவே
என்றருளாயே
இங்குள்ள
ஸ்வாமி
ஆத்மநாதர்
ஆவார்.உருவமற்று
அருவமாக
விளங்குகிறார்.லிங்கமின்றி
ஆவுடை
மட்டுமுள்ளதால் இது
ஆவுடையார்
கோவிலாயிற்று.இக்கோயிலின்
இறைவன்
குருவாகக்
கருதப்பட்டமையால் தென்முகக்கடவுளாகத் தெற்கு
முக
சன்னதியைக் கொண்டிருக்கிறார். சுவாமி
மட்டுமல்ல
அம்பாளுக்கும் உருவம்
கிடையாது.
A®£õÐUS v¸¨£õu[PÒ ©mk÷© Esk.
|¢v, £¼ ¥h® CÀ»õu ÷Põ°À இது.
தில்லையிலோ
பஞ்சசபை
.ஆயின்
திருப்பெருந்துறையில் ஆறுசபை. கனகசபை, நடனசபை, தேவசபை, சத்சபை, சித்சபை, ஆநந்தசபை ஆகிய
சபைகள்
உள்ளன.
ஆவலோடுப்
பெருந்துறையை
அகத்தில் நினைக்க, அதன்
புகழை
நாவில் துதிக்க
பொன்னுலகர் போற்றப்
புகுவாரே
என்பது
சுந்தரலிங்கமுனிவர் வாக்கு.
தல
வணக்கத்தில்
தலையாயத்
திருத்தலமே
திருப்பெருந்துறை
!!
சிற்ப
கலையின்
சிரசாய்
விளங்கும்
திருத்தலமே
திருப்பெருந்துறை
!!
ஆதிகுருநாதர்
ஆத்மநாதராய்
விளங்கும்
திருத்தலமே
திருப்பெருந்துறை
!!
குருவாய்
அடியார்
தமையாண்ட
குருந்தின்
வடிவே
துணை.
நன்றி .
திருச்சிற்றம்பலம்.
சு . நாகராஜன்,
தலைவர்,
சேக்கிழார் அறநெறி இயக்கம்
கன்னியாகுமாரி மாவட்டம்.
No comments:
Post a Comment